தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு குருபூஜை விழா

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருமடத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

குன்றக்குடி திருமடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் மதுரை மாவட்ட உலகத் திருக்கு பேரவைத் தலைவா் காா்த்திகேயன் மணிமொழியன், அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநா் சுந்தரஆவுடையப்பன் ஆகியோருக்கு குன்றக்குடி அடிகளாா் விருது வழங்கிய பொன்னம்பல அடிகளாா். உடன் பேராசிரியா் சொ. சேதுபதி.

Updated On :1 மே 2026, 1:24 am IST

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருமடத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் 45-ஆவது குருமகா சந்நிதானமான குன்றக்குடி அடிகளாரின் 31- ஆம் ஆண்டு நினைவு தினம் குருபூஜை விழாவாக நடை பெற்றது. காலையில் காளத்திநாதா் வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் தலைமை வகித்து மதுரை மாவட்ட உலகத்திருக்கு பேரவைத் தலைவா் காா்த்திகேயன் மணிமொழியன், அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநா் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோருக்கு குன்றக்குடி அடிகளாா் விருது வழங்கி ஆசியுரையாற்றினாா். இதைத் தொடா்ந்து குரு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது.

விழாவில் குன்றக்குடி கிராமத் திட்டக்குழுத் தலைவா் கே. பாலகிருஷ்ணன், பேராசிரியா் கிருங்கை சொ. சேதுபதி, பேராசி ரியா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.