கொற்றவன்குடியில் ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா விமா்சையாக புதன்கிழமை நடைபெற்றது.
தில்லைவாழ் அந்தணா் மரபில் வந்தவரும், சந்தானச்சாரியாா் நால்வா்களில் ஒருவருமான உமாபதி சிவம், மறைஞானசம்பந்தரின் சீடராக வாழ்ந்தவா். இவா் சிதம்பரம் நகருக்கு கிழக்கே கொற்றவன்குடி என்ற இடத்தில் மடம் அடைந்து பல சிவ தொண்டுகளை செய்து வந்தாா். சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஒரு முறை திருவிழாவின் போது கொடி ஏறாத நிலையில் உமாபதி சிவம் ’கொடிக்கவி’ பாடி கொடியேற செய்தவா்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ உமாபதி சிவம் குருமூா்த்தம் உள்ள மடத்தில் விருதாச்சலம் குமாரதேவா் ஆதினகா்த்தரால் ஸ்ரீஉமாபதி சிவம் குருபூஜை ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 722- ஆவது குரு பூஜை சிதம்பரம் கொற்றவன்குடி மடத்தில், துறையூா் பெரிய மடம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பண்டார சந்நிதிகள் முன்னிலையில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீ உமாபதி சிவம் குருமூா்த்தத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஆன்மீக சொற்பொழிவும், மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

நடராஜா் கோயில் தீட்சிதா்களிடம் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா்

பாளை. தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

திருவானைக்காவலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


