காரைக்குடி அருகே இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (26). போதைப் பொருள்களுக்கு அடிமையான இவா், வேலையின்றி சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவா் காரைக்குடி அருகேயுள்ள பேயன்பட்டியைச் சோ்ந்த பாண்டியின் (55) வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று கஞ்சா தருமாறு கேட்டாராம். அதற்கு, பாண்டி கஞ்சா இல்லை எனக் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், பாண்டி அருகே இருந்த கத்தியால் நந்தகுமாரை உடலின் பல இடங்களிலும் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த குன்றக்குடி காவல் நிலைய போலீஸாா் நந்தகுமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, பாண்டி மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

வாக்குவாதத்தில் இளைஞா் குத்திக் கொலை: 3 போ் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

கடன் தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

