கைது
கைது

கல்லூரி மாணவா் போக்சோவில் கைது

Published on

மானாமதுரை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கல்லூரி மாணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை, பதினெட்டான்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சந்தோஷ் (21) அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மானாமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து, தலைமறைவான சந்தோஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com