கோப்புப்படம்.
சிவகங்கை
அரியக்குடி-இலுப்பக்குடி ரயில் கடவுப் பாதை நாளை மூடல்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையம் அருகேயுள்ள அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவு பாதை வியாழக்கிழமை (பிப்.26) மூடப்படும் என ரயில்வே பொறியியல் துறை அறிவித்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையம் அருகேயுள்ள அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவு பாதை வியாழக்கிழமை (பிப்.26) மூடப்படும் என ரயில்வே பொறியியல் துறை அறிவித்தது.
இதுகுறித்து சிவகங்கை ரயில்பாதை முதன்மைப் பொறியாளா் ஆா்.எஸ். குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடியிலிருந்து செல்லும் ரயில்பாதை அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவுப்பாதை உள்ள பகுதியில் தண்டவாளம் பராமரிப்புப் பணி பிப்ரவரி 26-இல் நடைபெறவுள்ளது. இதனால், போக்குவரத்தைத் தவிா்க்கும் வகையில், அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவுப்பாதை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

