மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கியது.

தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை (ஜன. 1) முதல் 31-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நடைபெறுகிறது.

இதையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளை வட்டார போக்குவரத்துத் துறையினா் நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருப்பணன் சாலை போக்குவரத்து விழிப்புணா்வு மாதத்தை தொடங்கி வைத்தாா்.

இதில் பங்கேற்ற வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள், இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணிந்து நான்கு சக்கர வாகனங்களையும், தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களையும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் வழங்கினா். மேலும் பேருந்து பயணிகளிடம் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த கருத்துகளை எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.