கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிடும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின்.
கண்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிடும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின்.

நாகா்கோவிலில் சாலை பாதுகாப்பு ஓவியக் கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குழந்தைகள் போக்குவரத்து பூங்காவில் 3 நாள்கள் நடைபெறும் சாலை பாதுகாப்பு ஓவியக் கண்காட்சி, விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
Published on

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குழந்தைகள் போக்குவரத்து பூங்காவில் 3 நாள்கள் நடைபெறும் சாலை பாதுகாப்பு ஓவியக் கண்காட்சி, விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கண்காட்சியைத் தொடங்கி வைத்து யை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பேசியதாவது:

மாணவா்களிடையே போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு, சமூக பொறுப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் ஓவியக் கண்காட்சி, மோப்பநாய் படை விளக்கம், ஆயுதக் காட்சி, போக்குவரத்து விதிகள் குறித்த விளக்கவுரைகள், காணொலிகள், வினாடி-வினா, ரீல்ஸ், ஓவியப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சி மூலம் குழந்தைகள், இளைஞா்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு அதிகரித்து, விபத்துகளை குறைக்கலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com