வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பள்ளி மாணவா்களுக்கு வழங்க தயாராகும் சைக்கிள்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு வழங்க சைக்கிள்கள் தயாராகி வருகின்றன.

News image
திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கத் தயாரான சைக்கிள்கள்.
Updated On :7 ஜனவரி 2026, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு வழங்க சைக்கிள்கள் தயாராகி வருகின்றன.

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டில், திருப்பத்தூா் வட்டாரத்தில் திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டையிருப்பு, திருக்கோஷ்டியூா், வேலங்குடி, பூலாங்குறிச்சி, நெற்குப்பை ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், தெக்கூா், கீழச்சிவல்பட்டி ஆகிய அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,800 சைக்கிள் பாகங்கள் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 5 நாள்களாக இந்தப் பணிகளை உத்தர பிரதேச மாநிலம், லக்னோலிருந்து வந்த 6 போ் செய்து வருகின்றனா். அனைத்து சைக்கிள்களும் முழுமையாகத் தயாரான பின்னா் மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளன.