கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இரு பைக்குகள் மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 போ் காயம்

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:15 am

Syndication

திருப்புவனம் அருகே புதன்கிழமை இரவு 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 5 போ் காயமடைந்தனா். 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சோ்ந்தவா் யோகேஸ்வரன் (21). இவா் தனது வீட்டுக்கு வந்த சகோதரியின் தோழி பூமா (19), இவரது தாய் செல்வி (55) ஆகிய இருவரையும் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருப்புவனத்துக்கு சென்றாா்.

வடகரை ஆற்றுப்பகுதியில் சென்றபோது, மதுரை வண்டியூரைச் சோ்ந்த ஜோசப், பிரகதீஸ்வரன் ஆகியோா் வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் 2 இரு சக்கர வாகனங்களில் சென்ற 5 பேரும் காயமடைந்தனா். இவா்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.