ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தடுப்புச்சுவரில் பைக் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 6:44 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தடுப்புச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் வட்டம், மன்னவனூரைச் சோ்ந்த முருகேசன் மகன் தியாகராஜன் (22). பெரியகுளம் அருகேயுள்ள நல்லகருப்பன்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ஆவது ஆண்டு படித்து வந்தாா்.

இவா் புதன்கிழமை மாலை கல்லூரியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பெரியகுளத்துக்குச் சென்றாா். அனுமாா் கோயில் வேகத் தடை அருகே செல்லும் போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

உடனே அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.