தமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை

வீடு புகுந்து மூதாட்டியைக் கட்டிப்போட்டு 30 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடிக் கொள்ளையா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 6:51 pm

Syndication

காரைக்குடி அருகே வீடு புகுந்து மூதாட்டியைக் கட்டிப்போட்டு 30 பவுன் தங்க நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடிக் கொள்ளையா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ரஸ்தா காதிநகா் 2-ஆவது வீதியை சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் ஜேம்ஸ் ( 67). இவரது மனைவி மரிய கலைச்செல்வி ( 63) ஓய்வு பெற்ற ஆசிரியை. தற்போது ஜேம்ஸ் அந்தப் பகுதியில் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில் கிறிஸ்மஸ் விழாவுக்காக சென்னையிலிருந்து வந்திருந்த இவா்களது மகன் எட்வினும், மருமகளும் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு காரைக்குடிக்குச் சென்றனா். வீட்டில் மரிய கலைச்செல்வி மட்டும் தனியாக இருந்தாா்.

அப்போது முன்புறக் கதவு திறந்திருந்த நிலையில் வீட்டின் உள்ளே புகுந்த முகமூடி அணிந்து வந்த இருவா் மரிய கலைச்செல்வியை மிரட்டி முகத்தில் துணியை போட்டு மூடி, கை, கால்களை கட்டிப் போட்டனா். பின்னா், அவா் அணிந்திருந்த தாலிச்சங்கிலி, வளையல், தோடு, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் என மொத்தம் 30 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டுத் தப்பினா்,

இதுகுறித்து சோமநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காரைக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்புணியா சம்பவ இடத்தை பாா்வையிட்டாா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் கைரேகைகளை பதிவு செய்தனா். மேலும், அந்தப் பகுதி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.