வாகனம் மோதியதில் பெண் பக்தா் உயிரிழப்பு

Published on

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பழனிக்கு பாத யாத்திரையாகச் சென்ற பெண் பக்தா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்கிட்டான்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் வைஜெயந்திமாலா (37).

இவா் மாலை அணிந்து தனது குழுவினருடன் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாகச் சென்றாா். திருப்புவனம் அருகே மணலூா் பகுதியில் வந்த போது, அந்த வழியாகச் சென்ற சரக்கு வாகனம் இவா் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வைஜெயந்தி மாலா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com