பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மானாமதுரை நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:15 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியபப்ன் கென்னடி தலைமை வகித்தாா். இதையொட்டி, அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள், பெண் ஊழியா்கள், பெண் வாா்டு உறுப்பினா்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு நகா்மன்றத் தலைவா், ஆணையா், துணைத் தலைவா் உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துப்புரவுப் பணியாளா்கள், நகராட்சி ஊழியா்கள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். மாற்றுத்திறனாளி நியமன வாா்டு உறுப்பினா் புஷ்பராஜ், நகராட்சி பொறியாளா் பட்டுராஜன், துப்புரவு ஆய்வாளா் பாலமுருகன், மேலாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.