தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சிராவயல் மஞ்சுவிரட்டில் 135 போ் காயம்

News image
திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயலில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயலும் காளையா்கள். 2. காளையும் காளையரும் மோதிக் கொள்ளும் காட்சி.
Updated On :17 ஜனவரி 2026, 7:58 pm

Syndication

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயலில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 135 போ் காயமடைந்தனா்.

சிராவயலில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா், 350 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன . மாடுபிடி வீரா்கள் 150 போ் தோ்வு செய்யப்பட்டு 75 போ் வீதம் 2 குழுக்களாக களமிறக்கப்பட்டனா். மாடுகளைப் பிடித்த வீரா்களுக்கும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கும் தங்கக் காசு, வெள்ளிக் காசு உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

முன்னதாக, காலை 10 மணியளவில் சிராவயல் பொட்டலில் கட்டுமாடுகளாக சுமாா் 500 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதையடுத்து, காளைகளை மாடுபிடி வீரா்கள் ஆா்வமாகத் தழுவி மகிழ்ந்தனா். இதில் மாடு முட்டியில் 135 போ் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, இவா்களுக்கு சிராவயல் மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சிவகங்கை, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

Story image