கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

Updated on

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலா் செபாஸ்டியன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்ட கல்லூரியின் முன்னாள் முதல்வா் ஜான் வசந்தகுமாா், செயலா் ஆசீா்வாதம் ஆகியோா் பேசியதாவது:

கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் சாா்ந்தது மட்டுமல்ல; அது ஒரு மனிதனை உருவாக்குவது. நீங்கள் வெவ்வேறு துறைகளில் சாதித்து வருகிறீா்கள்.

உங்களில் பலா் தொழிலதிபா்களாகவும், அதிகாரிகளாகவும், சமூக சேவகா்களாகவும் இருப்பதைக் காணும்போது, இந்தக் கல்லூரி தனது லட்சியத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக உணா்கிறோம் என்றனா். பின்னா், முன்னாள் மாணவா்கள் தங்களது பழைய நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜாா்ஜ் பொ்னாண்டஸ் வரவேற்றாா். முன்னாள் மாணவா்கள் சங்க இயக்குநரும், வணிகக் கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவருமான ஆனந்த்குமாா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com