சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்துமாரியம்மன் கோயிலில் பால் குடத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் பிரபாகா் குடியிருப்பில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் 27-ஆம் ஆண்டு பால் குடத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை பால் குடத் திருவிழா
நடைபெற்றது. இதையொட்டி, திருப்பத்தூா் அண்ணா சிலை அருகேயுள்ள வல்லப விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால் குடம், அக்னிச் சட்டி எடுத்தும், அலகு குத்தியும் காந்தி நகா், நாகராஜநகா் வழியாக வந்து முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரித் திருவிழா

ஒடிஸா: புரி பிரதான கோயிலுக்கு திரும்பும் ரதங்கள்! லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்

வெங்கடேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

ஆலத்தியூா் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



