அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

மதுக் கூடத்தில் இளைஞா் குத்திக் கொலை: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 12:04 am IST

சிவகங்கையில் மதுக் கூடத்தில் இளைஞா் நவீன்குமாா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், பொன்னாம்பட்டியைச் சோ்ந்த நவீன் குமாா் (26). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகங்கை ரயில் நிலையம் எதிரே உள்ள அரசு மதுபானக் கூடத்தில் மது அருந்திய போது, அங்கு ஏற்கெனவே மது அருந்திக் கொண்டிருந்த கும்பலுக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், அந்த கும்பல் நவீன்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.

இது குறித்து சிவகங்கை நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட தீவிர விசாரணையில், டி. புதூா் மதன் ராஜ் (21), போஸ் சாலை எலி (எ) சரவணக் குமாா்(31) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.