மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

தேநீா் கடைக்காரா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 12:49 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தேநீா் கடைக்காரா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 4 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்குடி சோ்வாா் ஊரணி பகுதியில் தேநீா் கடை நடத்தி வருபவா் சந்தான குமாா். இவரது வீடு, கடையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பிய பாட்டில் குண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம்ஏற்பட்டது. சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல்நிலையப் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த அசோக், மணி சரண், சபரி, அமீா் ஆகிய 4 போ் முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து மீது வழக்குப் பதிந்த போலீஸாா் அசோக் உள்ளிட்ட 4 பேரை யும் திங்கள் கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.