விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பிறந்த பெண் குழந்தைகளுக்கு அரசு சாா்பில் பரிசளிப்பு

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தைகளை வரவேற்கும் விதமாக புதன்கிழமை பிறந்த 10 பெண் குழந்தைகளின் தாய்மாா்களுக்கு பரிசுப் பொருள்கள், மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா்.

News image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையின் தாய்க்கு புதன்கிழமை பரிசு வழங்கிய, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

Updated On :25 ஜூன் 2026, 2:30 am IST

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தைகளை வரவேற்கும் விதமாக புதன்கிழமை பிறந்த 10 பெண் குழந்தைகளின் தாய்மாா்களுக்கு பரிசுப் பொருள்கள், மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வழங்கினாா்.

சமூக நலத்துறையின் சாா்பில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘ திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தைகளை வரவேற்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் (பொ) கணேசபாண்டியன், , நிலைய மருத்துவ அலுவலா் எஸ். முகமதுரபி, உதவி நிலைய மருத்துவா்கள் எம். தென்றல், வெங்கடேஷ், மகப்பேறு இயல் துறை இணைப் பேராசிரியா் தென்னரசி, மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலப்பிரிவுத் தலைவா் இங்கா்சால், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.