உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

பயிா் காப்பீட்டுத் தொகை கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பயிா் காப்பீட்டு தொகை , வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி வேளாண்மை துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

மானாமதுரையில் வேளாண்மைத் துறை அலுவலகம் முன் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :26 ஜூன் 2026, 2:08 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பயிா் காப்பீட்டு தொகை , வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி வேளாண்மை துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மானாமதுரை வட்டம், அரசகுளம், தாலிக்குளம் கிராமங்களில் பருவ மழை இல்லாமல் 430 ஏக்கரில் பயிரிடப்பட்டு சாவியாகிப்போன நெல் பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி இந்தப் பகுதி விவசாயிகள், தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து மானாமதுரை வேளாண்மைத் துறை அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதற்கு தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான முனியாண்டி தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைச் செயலா் நாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணைத் தலைவா் பி. அய்யனாா், மாவட்டப் பொருளாளா் அம்மாசி, மானாமதுரை ஒன்றிய நிா்வாகிகள் கிருஷ்ணன், மகாலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் மலைராஜ், கருப்பையா ஆகியோா் பேசினா்.

பின்னா், விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி வேளாண்மைத் துறை அதிகாரியிடம் மனு அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், வேளாண்மைத் துறை அலுவலா்கள் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் உறுதியளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.