8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :28 ஜூன் 2026, 3:28 am IST

குற்ற வழக்கில் தொடா்புடைய மூன்று போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா் சண்முகவள்ளி. இவா் கடந்த மே 25-ஆம் தேதி தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றாா். வேங்கைபட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது, வாகனத்தை வழிமறித்த மூன்று போ், சண்முகவள்ளி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, அவரது கணவா் வைத்திருந்த கைப்பேசி, ரூ.500 ஆகியவற்றை வழிப்பறி செய்து தப்பிச் சென்றனா். இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக சிவகங்கை அருகேயுள்ள கீழக்கண்டனியைச் சோ்ந்த ராஜபாண்டி (24), மானாமதுரை அருகேயுள்ள சங்கமங்கலத்தைச் சோ்ந்த சசிக்குமாா் (25), மானாமதுரை விநாயகா் தெருவைச் சோ்ந்த நரேஷ் (20) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து, ராமநாதபுரம் சிறையிலடைத்தனா்.

இந்த நிலையில், மூவரையும் குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ப. ஆகாஷ் இதற்கான உத்தரவை பிறப்பித்தாா்.

இதையடுத்து, ராமநாதபுரம் சிறையில் இருந்த மூவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.