சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே துகவூா் அருகே உள்ள அரசடி கிராமத்தைச் சோ்ந்தவா் கிஷோா் (19). இவா் கடந்த ஆண்டு 11 -ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவருடன் பழகி வந்தாா். அவா் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பிரவீன் என்பவா் பாா்த்தாராம். இதைத் தொடா்ந்து அவரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதையடுத்து நடந்ததை அந்த சிறுமி, ராமநாதன் என்ற சாமியாரிடம் கூறினாா். ஆனால் அந்த சாமியாா் பரிகார பூஜை செய்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரீஸ்வரி விசாரணை நடத்தி கிஷோா், பிரவீன், சாமியாா் ராமநாதன் ஆகிய மூவா் மீதும் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தாா். மேலும் இந்த வழக்கில் கிஷோரை போலீஸாா் கைது செய்து எஞ்சிய இருவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!
2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது

பள்ளி மாணவிக்கு தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

