சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டது குறித்து...

News image

பிரதிப்படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 8:31 am

ஜார்க்கண்டின் கிரிதி மாவட்டத்தில், 13 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதன் காரணமாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை (ஏப். 04) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் உடலில் சந்தேகத்திற்கிடமான உடல் மாற்றங்களை அவளது பெற்றோர் கவனித்த பிறகு, குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவுசெய்யப்பட்டு, 35 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கவான் காவலதிகாரி ஜெய்பிரகாஷ் குமார் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

விசாரணை மேற்கொண்டபோது, ​​அந்த நபர் தன்னை பாலியல் ரீதியாக அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், இதை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார்" எனத் தெரிவித்தார்.

Summary

Police stated that a man was arrested on Saturday (April 4) in Jharkhand's Giridih district for allegedly repeatedly sexually assaulting a 13-year-old girl and causing her to become pregnant.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.