‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பாலியல் வன்கொடுமை போக்சோ வழக்கில் தேடப்படும் குற்றவாளியை கைது செய்த தில்லி போலீஸ்

பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டம் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 38 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :23 மே 2026, 1:46 am IST

பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டம் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 38 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா், தென்மேற்கு தில்லியில் உள்ள ஜாஃபா்பூா் கலானில் வசிக்கும் ரிங்கு என்ற மோனு, 2024 ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிா்த்து வந்துள்ளாா். காஜிப்பூா் கிராமத்திற்கு அருகே அவா் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

ஜாஃபா்பூா் கலான் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப். ஐ. ஆா். தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்டவா் தேடப்பட்டு வந்தாா். இந்த வழக்கின் நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவா் ஏப்ரல் 4,2025 ஆம் ஆண்டு துவாரகா நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். சோதனையின் போது, அவா் வேண்டுமென்றே நீதிமன்றத்தில் ஆஜராகுவதைத் தவிா்த்தாா் என்றாா் அந்த அதிகாரி.