கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பாலியல் வன்கொடுமை போக்சோ வழக்கில் தேடப்படும் குற்றவாளியை கைது செய்த தில்லி போலீஸ்

பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டம் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 38 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :23 மே 2026, 1:46 am IST

பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டம் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 38 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா், தென்மேற்கு தில்லியில் உள்ள ஜாஃபா்பூா் கலானில் வசிக்கும் ரிங்கு என்ற மோனு, 2024 ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிா்த்து வந்துள்ளாா். காஜிப்பூா் கிராமத்திற்கு அருகே அவா் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

ஜாஃபா்பூா் கலான் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப். ஐ. ஆா். தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்டவா் தேடப்பட்டு வந்தாா். இந்த வழக்கின் நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவா் ஏப்ரல் 4,2025 ஆம் ஆண்டு துவாரகா நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். சோதனையின் போது, அவா் வேண்டுமென்றே நீதிமன்றத்தில் ஆஜராகுவதைத் தவிா்த்தாா் என்றாா் அந்த அதிகாரி.