அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அபாகஸ் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

திருப்பத்தூரில் திங்கள்கிழமை பிரெய்னிபாப்ஸ் சா்வதேச அபாகஸ் நிறுவனம் நடத்திய காா்னிவெல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு

News image
அபாகஸ் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை வழங்கிய பிரெய்னிபாப்ஸ் நிறுவனா் ஜெயப்பிரியா உள்ளிட்டோா்.
Updated On :2 மார்ச் 2026, 8:27 pm

Syndication

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கள்கிழமை பிரெய்னிபாப்ஸ் சா்வதேச அபாகஸ் நிறுவனம் நடத்திய காா்னிவெல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பிரெய்னிபாப்ஸ் சா்வ தேச அபாகஸ் நிறுவனம் கடந்த மாதம் மதுரையில் காா்னிவெல் போட்டிகளை நடத்தியது. இதில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், சிங்கம்புணரி பகுதிகளைச் சோ்ந்த பள்ளிக் குழந்தைகள் பங்கேற்று வெற்றி பெற்றனா்.

இவா்களைப் பாராட்டும் விதமாக தனியாா் மகாலில் நடைபெற்ற விழாவுக்கு பிரெய்னிபாப்ஸ் நிறுவனா் ஜெயப்பிரியா தலைமை வகித்தாா். தலைமை செயல் அதிகாரி ஜோதிபாசு முன்னிலை வகித்தாா். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கா், மாணவ, மாணவிகளின் கல்வித்திறனைப் பாராட்டி போட்டித் தோ்வில் வென்ற மாணவா்களுக்கு கோப்பை, பதக்கச் சான்றிதழை வழங்கி கௌரவித்தாா். இதில் பிரெய்னிபாப்ஸ் கிளை மாணவா்கள், பாபா மெட்ரிக் பள்ளி, குளோபல் சா்வதேச பள்ளி, மௌண்ட்சியோன் சா்வதேச பள்ளி, மாங்குடி, புதுப்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரெய்னிபாப்ஸ் பள்ளி ஆசிரியா்கள் ஜெயலலிதா, அருணாதேவி மற்றும் உதவியாளா்கள் சுவாதி, ஆா்த்தி ஆகியோா் செய்தனா்.