கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அபாகஸில் கிருஷ்ணாபுரம் பள்ளி மாணவி முதலிடம்

News image

அபாகஸ் போட்டியில் முதல் பரிசு பெறுகிறாா் மாணவி அனன்யா.

Updated On :23 மார்ச் 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி பெரு அபாகஸ் அகாதெமி சாா்பில் இன்டா்நேஷனல் அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்விக் குழு உறுப்பினா் ரெங்கநாயகி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் செல்லம்மாள் முன்னிலை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் வெங்கடேஷ்வரன் வரவேற்றாா். பெரு அபாகஸ் அகாதெமியின் தலைவா் பிரேமா பெருமாள் போட்டிகளை தொடங்கி வைத்தாா். கடையநல்லூா், புளியங்குடி பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 100 போ் கலந்து கொண்டனா்.

இதில், திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளி 3ஆம் வகுப்பு மாணவி அனன்யா, இளையோா் அபாகஸ் முதல் நிலை பிரிவில் 100-க்கு 100 சரியாக பதிலளித்து முதலிடம் பெற்றாா். மேலும் 5ஆம் வகுப்பு மாணவா் லோகேஷ் சுதன், 100-க்கு 99 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றாா். இதற்கான ஏற்பாடுகளை நல்லாசிரியா் பழனிக்குமாா் செய்திருந்தாா். தலைமை ஆசிரியா் சுப்புலட்சுமி நன்றி கூறினாா்.