கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கிணற்றில் குதித்த இளைஞர் மீட்பு

காரைக்குடி அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை தீணையப்பு, மீட்புப்படையினா் மீட்டனா்.

News image
இளைஞர் மீட்பு- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:52 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை தீணையப்பு, மீட்புப்படையினா் மீட்டனா்.

அரியக்குடி பூ மாரியம்மன் கோவில் தொல்காப்பியம் நகரைச் சோ்ந்த காளிதாசன் மகன் விக்னேஷ் (29). ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ள இவா் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தாராம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாராம்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காரைக்குடி தீயணைப்பு, மீட்புப் படையினா் கிணற்றுக்குள் இறங்கி விக்னேஷை உயிருடன் மீட்டனா். இதுகுறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசாா் விசாரித்து வருகின்றனா்.