மீட்கப்பட்ட கடமான்.
மீட்கப்பட்ட கடமான்.

கிணற்றில் விழுந்த கடமான் மீட்பு!

தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியில் தோட்டக் கிணற்றில் விழுந்த கடமானை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
Published on

தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியில் தோட்டக் கிணற்றில் விழுந்த கடமானை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த ராஜன்திருப்பதிக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் வியாழக்கிழமை கடமான் விழுந்து தத்தளித்தது.

இதுகுறித்து தகவலறிந்த பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் பழனி தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று கிணற்றில் விழுந்த கடமானை மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து வனப்பகுதிக்குள் மான் விடப்பட்டது.

Dinamani
www.dinamani.com