ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு

சேலம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினா் கயிறுகட்டி உயிருடன் மீட்டனா்.

News image

கிணறு - பிரதிப் படம்.

Updated On :25 மார்ச் 2026, 1:45 am IST

சேலம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினா் கயிறுகட்டி உயிருடன் மீட்டனா்.

சேலம் மாவட்டம், அரியானூா் அருகே சீரகாபாடி கொடவல்காடு, கடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி. இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றின் பம்பு மோட்டாரை இயக்குவதற்காக சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்தாா்.

இதையறிந்த ஊா் பொதுமக்கள், ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்துவந்து கயிறு கட்டி கிணற்றிலிருந்து ராஜேஸ்வரியை உயிருடன் மீட்டனா்.