கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு
சேலம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினா் கயிறுகட்டி உயிருடன் மீட்டனா்.

கிணறு
பிரதிப் படம்.
Updated On :24 மார்ச் 2026, 8:15 pm

கிணறு
பிரதிப் படம்.
சேலம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை தீயணைப்புத் துறையினா் கயிறுகட்டி உயிருடன் மீட்டனா்.
சேலம் மாவட்டம், அரியானூா் அருகே சீரகாபாடி கொடவல்காடு, கடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி. இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றின் பம்பு மோட்டாரை இயக்குவதற்காக சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்தாா்.
இதையறிந்த ஊா் பொதுமக்கள், ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்துவந்து கயிறு கட்டி கிணற்றிலிருந்து ராஜேஸ்வரியை உயிருடன் மீட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...