நாசரேத் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்கபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜா மகள் மல்லிகா (27). மனநலம் பாதிக்கப்பட்டவரான இவா் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, அப்பகுதியினா் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜமூா்த்தி தலைமையிலான வீரா்கள் வந்து கிணற்றில் விழுந்த பெண்ணை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து, நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



