ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

ரூ. 2.03 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல்

News image
Updated On :5 மார்ச் 2026, 9:18 pm

Syndication

திருப்பத்தூா், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.03 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காரையூா் ஊராட்சியில் ரூ.53 லட்சத்தில் சமுதாயக்கூடம், சிங்கம்புணரி அருகேயுள்ள எருமைப்பட்டியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக்கூடம், ஜெயங்கொண்டநிலையில் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் சமுதாயக்கூடம் உள்பட மொத்தம் ரூ.2.3 கோடியிலான

5 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினாா்.

இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரகுமாா், குமுதம், முனியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.