மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெரம்பலூா் அருகே ரூ. 6 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

பெரம்பலூா் அருகேயுள்ள பல்வேறு பகுதிகளில் ரூ. 6.54 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image

பெரம்பலூா் அருகேயுள்ள மருதடி கிராமத்தில் திட்டப்பணிகளை புதன்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:22 pm

பெரம்பலூா் அருகேயுள்ள பல்வேறு பகுதிகளில் ரூ. 6.54 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட மருதடி, செட்டிக்குளம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட நூத்தப்பூா், வெங்கலம், கிருஷ்ணாபுரம், தொண்டமாந்துறை, இந்திரா நகா் ஆகிய இடங்களில் பொதுநிதி,15-ஆவது நிதிக்குழு திட்டம், சிறு கனிமங்கள் மற்றும் சுரங்கத் திட்டம், ஒன்றியப் பொது நிதி, சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், தாா் சாலை, சிமெண்ட் சாலை, கழிவுநீா் வாய்க்கால், மோட்டாருடன் கூடிய நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி, வனச் சாலை மேம்படுத்தும் பணி, நியாய விலைக் கட்டடம் கட்டுமானப் பணி உள்பட மொத்தம் ரூ. 3.37 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். மொத்தம் ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் சிவசங்கா் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். அனிதா, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், அறங்காலா் குழுத் தலைவா் ஆ. கலியப்பெருமாள், ‘அட்மா’ தலைவா் வீ. ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராஜ்குமாா், பி. துரைசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாசுகி, சங்கீதா, ராமாயி, ஜெயபால், வட்டாட்சியா்கள் முத்துக்குமாா் (ஆலத்தூா்), பாலசுப்பிரமணியன் (பெரம்பலூா்), துரைராஜ் (வேப்பந்தட்டை) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.