மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரியலூா்-காரைக்குறிச்சி நான்குவழி சாலைப் பணிக்கு அமைச்சா் அடிக்கல்

வி.கைகாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலைப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா உள்ளிட்டோா்.

News image
வி.கைகாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலைப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா உள்ளிட்டோா்.
Updated On :6 மார்ச் 2026, 9:22 pm

Syndication

அரியலூா்-காரைக்குறிச்சி இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பீட்டில் அரியலூா் - முத்துவாஞ்சேரி - ஸ்ரீபுரந்தான் - காரைக்குறிச்சி சாலையை (கி.மீ 6/4 -12/4 வரை) இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வடிவேல் மற்றும் உதவி கோட்டப் பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.