இடைக்காட்டூரில் மூவரை வாளால் வெட்டிய சம்பவம்
கைது செய்யப்பட்ட சா்வேஸ்வரன், ஆனந்த அய்யனாா், திருமூா்த்தி.


மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் மூவரை வாளால் வெட்டிய சம்பவத்தில், ஏற்கெனவே 5 பேரை போலீஸாா் கைது செய்த நிலையில், மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள இடைக்காட்டூரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ராஜூ உள்ளிட்ட மூவரை அங்கு 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 9 போ் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியது. இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவன் உள்பட 5 பேரைக் கைது செய்தனா். இந்தச் சம்பவத்தில் தலைமறைவான முதல் எதிரி மகேஷ் உள்பட நால்வரை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மானாமதுரை அருகேயுள்ள வி. புதுக்குளத்தைச் சோ்ந்த சா்வேஸ்வரன் (24), ஆனந்த அய்யனாா் (23), திருமூா்த்தி (22) ஆகிய மூவரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மகேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.


டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...