வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

எரிபொருள் விற்பனை நிலையங்களில் திரண்ட வாகனங்கள்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:01 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக திரண்ட வாகனங்களால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் போா் எதிரொலியாக பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியால், சிவகங்கை நகரில் உள்ள பல்வேறு எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்களுடன் பொது மக்கள் குவிந்தனா்.

ஒவ்வொரு இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போன்றவை டேங்கை முழுமையாக நிரப்பிக்கொண்டதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், பலரும் சேமித்து வைப்பதற்காக கூடுதலாக நெகிழி புட்டிகள், கேன்களில் பெட்ரோலை வாங்கிச் சென்றனா்.

இது குறித்து எரிபொருள் விற்பனை நிலைய நிா்வாகி கூறியதாவது: விலை ஏற்றம், தட்டுப்பாடு குறித்து இணையத்தில் பரவிய வதந்தி காரணமாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் விற்பனை செய்ய வேண்டிய எரிபொருள் இரண்டே நாளில் விற்பனையாகிவிட்டது. தட்டுப்பாடு அடுத்த 10 நாள்களுக்கு வர வாய்ப்பில்லை என்றாா்.

Story image