சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பதிவு செய்து 3 நாள்களாகியும் எரிவாயு உருளை கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

சிவகங்கையில் சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்து 3 நாள்களாகியும் எரிவாயு உருளை கிடைக்காததால் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 12:02 am

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்து 3 நாள்களாகியும் எரிவாயு உருளை கிடைக்காததால் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை-மேலூா் சாலையில் இண்டேன் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் எரிவாயு உருளைக்கு பதிவு செய்து 3 நாள்களாகியும் இதுவரை விநியோகம் செய்யப்படவில்லை.

இதைக் கண்டித்து, இந்தப் பகுதி பொதுமக்கள் காலி சமையல் எரிவாயு உருளைகளுடன் சிவகங்கை-மேலுா் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சிவகங்கை நகா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், சாலையில் வைத்திருந்த எரிவாயு உருளைகளை போலீஸாா் அகற்றினா். அப்போது, பொதுமக்களுக்கு, போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, விரைவில் சமையல் எரிவாயு கிடைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் அறிவுறுத்தியதின் பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இந்தச் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Story image