சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

பதிவு செய்து 3 நாள்களாகியும் எரிவாயு உருளை கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

சிவகங்கையில் சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்து 3 நாள்களாகியும் எரிவாயு உருளை கிடைக்காததால் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 மார்ச் 2026, 12:02 am

சிவகங்கையில் சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்து 3 நாள்களாகியும் எரிவாயு உருளை கிடைக்காததால் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை-மேலூா் சாலையில் இண்டேன் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் எரிவாயு உருளைக்கு பதிவு செய்து 3 நாள்களாகியும் இதுவரை விநியோகம் செய்யப்படவில்லை.

இதைக் கண்டித்து, இந்தப் பகுதி பொதுமக்கள் காலி சமையல் எரிவாயு உருளைகளுடன் சிவகங்கை-மேலுா் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சிவகங்கை நகா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், சாலையில் வைத்திருந்த எரிவாயு உருளைகளை போலீஸாா் அகற்றினா். அப்போது, பொதுமக்களுக்கு, போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, விரைவில் சமையல் எரிவாயு கிடைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் அறிவுறுத்தியதின் பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இந்தச் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Story image