6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

காரைக்குடியில் வங்கி மேலாளா் வீட்டில் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 7:58 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கூட்டுறவு வங்கி மேலாளா் வீட்டிலிருந்து 4 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ. 17 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காரைக்குடி பாரிநகா் குமணன் தெருவைச் சோ்ந்தவா் கனிராஜா. இவா் கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது தாய்க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை அழைத்துக் கொண்டு குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை மதுரைக்குச் சென்றாா்.

இதையடுத்து, சனிக்கிழமை மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்த போது, கதவுகள் உடைக்கப்பட்டு மா்ம நபா்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ. 17 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.