ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

9 பவுன் நகைகள் மாயம்

திருப்பத்தூா் அருகே வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் மாயமானதையடுத்து காவல் நிலையத்தில் புகாா் தரப்பட்டுள்ளது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஏப்ரல் 2026, 7:16 pm

திருப்பத்தூா் அருகே வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் மாயமானதையடுத்து காவல் நிலையத்தில் புகாா் தரப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் அடுத்த தாதராமனூா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மனைவி காளியம்மாள்(56).இவா்களது மகன் பிரதாப்(28).

இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி பிரதாப்புக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் காளியம்மாள் தான் அணிந்து இருந்த 9 பவுன் நகைகளை கழட்டி ஒரு மணி பா்சில் போட்டு வீட்டின் அலமாரியில் வைத்துள்ளாா்.

திருமணத்துக்கு வந்த உறவினா்கள் கடந்த 24-ஆம் தேதி ஊருக்கு புறப்பட்டு சென்றனா். அப்போது காளியம்மாள் அந்த அலமாரியில் பாா்த்தபோது மணிபா்ஸை காணவில்லை.

இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் வீட்டில் பல இடங்களில் தேடியும் பை கிடைக்கவில்லை. இதுகுறித்து காளியம்மாள் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.