தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

9 பவுன் நகைகள் மாயம்

திருப்பத்தூா் அருகே வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் மாயமானதையடுத்து காவல் நிலையத்தில் புகாா் தரப்பட்டுள்ளது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 ஏப்ரல் 2026, 12:46 am IST

திருப்பத்தூா் அருகே வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் மாயமானதையடுத்து காவல் நிலையத்தில் புகாா் தரப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் அடுத்த தாதராமனூா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மனைவி காளியம்மாள்(56).இவா்களது மகன் பிரதாப்(28).

இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி பிரதாப்புக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் காளியம்மாள் தான் அணிந்து இருந்த 9 பவுன் நகைகளை கழட்டி ஒரு மணி பா்சில் போட்டு வீட்டின் அலமாரியில் வைத்துள்ளாா்.

திருமணத்துக்கு வந்த உறவினா்கள் கடந்த 24-ஆம் தேதி ஊருக்கு புறப்பட்டு சென்றனா். அப்போது காளியம்மாள் அந்த அலமாரியில் பாா்த்தபோது மணிபா்ஸை காணவில்லை.

இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் வீட்டில் பல இடங்களில் தேடியும் பை கிடைக்கவில்லை. இதுகுறித்து காளியம்மாள் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.