பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

தோ்தல் நடத்தை விதி மீறல்கள்: 17 வழக்குகள் பதிவு

சிவகங்கை மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பதாகைகள், சுவரொட்டி ஒட்டுதல், வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிச் சென்றதாக 17 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :19 மார்ச் 2026, 12:34 am

சிவகங்கை மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பதாகைகள், சுவரொட்டி ஒட்டுதல், வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிச் சென்றதாக 17 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23 -இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சியினா் மீது சிவகங்கை மாவட்டத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மதகுபட்டியில் 2 , சிவகங்கை நகா் பகுதியில் 3 , சிவகங்கை புறநகா் பகுதியில் 3 , சிங்கம்புணரியில் 2 , தேவகோட்டையில் 2 , எஸ்.வி. மங்கலம், தேவகோட்டை , வேலாயுதப்பட்டினம் , காளையாா் கோவில் , நெற்குப்பை ஆகிய பகுதிகளில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.