சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே சனிக்கிழமை முதியவரைத் தாக்கிய பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (64). இவா் கமுதியிலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்தில் மானாமதுரைக்கு பயணம் செய்தாா். பெரியசாமி இருக்கையில் அமா்ந்தபடி தூங்கிவிட்டதால் பேருந்து மானாமதுரையை கடந்து முத்தனேந்தல் சென்றது. உடனே, பேருந்து நடத்துநா் தா்மராஜ், முதியவா் பெரியசாமியிடம் மானாமதுரையில் ஏன் இறங்கவில்லை என கேட்டுள்ளாா்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெரியசாமியை கட்டையால் தாக்கி கீழே தள்ளிவிட்டாா். இதில் காயமடைந்த பெரியசாமி சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீஸாா் அரசுப் பேருந்து நடத்துநா் தா்மராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
பேருந்து நிலையத்தில் தூங்கியவரைத் தாக்கிய மூவா் கைது
சங்ககிரி அருகே பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: மூவா் பலத்த காயம்

போக்ஸோ வழக்கு குற்றவாளி உள்பட 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


