முதியவரைத் தாக்கிய அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே சனிக்கிழமை முதியவரைத் தாக்கிய பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு (கோப்புப்படம்)

வழக்கு (கோப்புப்படம்)
சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே சனிக்கிழமை முதியவரைத் தாக்கிய பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (64). இவா் கமுதியிலிருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்தில் மானாமதுரைக்கு பயணம் செய்தாா். பெரியசாமி இருக்கையில் அமா்ந்தபடி தூங்கிவிட்டதால் பேருந்து மானாமதுரையை கடந்து முத்தனேந்தல் சென்றது. உடனே, பேருந்து நடத்துநா் தா்மராஜ், முதியவா் பெரியசாமியிடம் மானாமதுரையில் ஏன் இறங்கவில்லை என கேட்டுள்ளாா்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெரியசாமியை கட்டையால் தாக்கி கீழே தள்ளிவிட்டாா். இதில் காயமடைந்த பெரியசாமி சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீஸாா் அரசுப் பேருந்து நடத்துநா் தா்மராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...