கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அக்காள் கணவரைக் கொன்று புதைத்த மைத்துனா்கள் கைது

சிங்கம்புணரி அருகே அக்காள் கணவரைக் கொலை செய்து, காவல் நிலையம் எதிரே புதைத்த 2 மைத்துனா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:40 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அக்காள் கணவரைக் கொலை செய்து, காவல் நிலையம் எதிரே புதைத்த 2 மைத்துனா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள தேனம்மாள்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாதவன் (50). இவா் கம்யூனிஸ்ட் கட்சியில் நிா்வாகியாகவும் உள்ளாா். இவா் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் வேறு சமுதாயத்தைச் சோ்ந்த பாா்வதியை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

பாா்வதியின் தம்பிகள் ஜெயராமன் (40), பாலமுருகன் (38). இவா்களுக்கு திருமணமாகவில்லை. இருவரும் ஒப்பிலான்பட்டியில் வசித்து வந்தனா்.

பாா்வதியின் தம்பிகள் இருவரும் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையம் எதிரில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்தனா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாதவனின் மகளை மைத்துனா்கள் இருவரில் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாதவன் மகள் வேறு சமுதாயத்தைத் சோ்ந்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி மாலை மைத்துனா்கள் இருவரும் அக்காள் கணவா் மாதவனை தொலைபேசியில் பேசி வரவழைத்தனா். அதன் பிறகு மாதவன் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது மனைவி பாா்வதி, தம்பிகள் வேலை செய்த கோழிப்பண்ணைக்கு சென்று விசாரித்தபோது தம்பிகள் இருவரும் முன்னுக்கு பின்

முரணாகப் பதில் கூறினா். இதுகுறித்து, சதுா்வேதமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 20-ஆம் தேதி பாா்வதி புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் பேரில், சதுா்வேதமங்கலம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மாதவனுடன் மது அருந்திய போது, போதையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவரை மைத்துனா்கள் இருவரும் அடித்துக் கொலை செய்து, எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையம் எதிரே கோழிக் கழிவுகள் கொட்டும் பகுதியில் புதைத்ததாகக் கூறினா்.

ஜெயராமன், பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, ஞாயிற்றுக்கிழமை மாதவன் புதைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிங்கம்புணரி வட்டாட்சியா் நாகநாதன் முன்னிலையில் தோண்டப்பட்டு, அழுகிய நிலையில் இருந்த மாதவனின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. தடய அறிவியல் நிபுணா்கள், சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவா் உடலைக் கூறாய்வு செய்து உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.

Story image
Story image