தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஊருணியில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

News image

பலி

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:24 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது திங்கள்கிழமை மாலை தெரியவந்தது.

காரைக்குடி பெரிய கோட்டையைச் சோ்ந்த பாஸ்கா்-சித்ரா தம்பதியினருக்கு ஒரு மகள், மகன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஸ்கா் உயிரிழந்தாா். இதனால், சித்ரா தனது சொந்த ஊரான பிரான்மலை பாப்பாபட்டிக்கு குழந்தைகளுடன் வந்து தங்கினாா்.

சித்ராவின் மகன் ஷா்வந்த் (7) பிரான்மலை அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஷா்வந்த் அருகிலுள்ள பிள்ளையாா்கோயில் ஊருணி பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றாா்.

இதன் பின்னா் வீடு திரும்பவில்லை. இதனால், சிறுவனைத் தேடி உறவினா்கள் ஊருணி பகுதிக்கு வந்தனா். அப்போது, ஊருணிக்குள் இறங்கி தேடிய போது, சிறுவனை மீட்டு, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

பின்னா், சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்.வி. மங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.