நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிவகங்கையில் ஓய்விடம் மாற்றம்: கட்டுமானத் தொழிலாளா்கள் அதிருப்தி

சிவகங்கையில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கான ஓய்விடம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால் தொழிலாளா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கான ஓய்விடம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால் தொழிலாளா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

சிவகங்கை சிவன் கோயில் அருகில் தினமும் நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளா்கள் கூடி நிற்பாா்கள். அப்போது, அங்கு வரும் வேலை அளிப்பவா்கள் தங்களுக்கு தேவைப்படும் தொழிலாளா்களை தோ்வு செய்து அழைத்துச் செல்வது வழக்கம்.

நூற்றுக்கணக்கானோா் ஒரே இடத்தில் சாலையோரம் கூடி நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாா்ச் 1-ஆம் தேதி நடைபெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் துரைஆனந்த் பேசுகையில், நகராட்சி சாா்பில் உழவா் சந்தை அருகே கட்டுமானத் தொழிலாளா்கள் காத்திருப்பதற்கு இடம் ஒதுக்கப்படும் என அறிவித்தாா்.

மேலும், அந்த இடத்தில், பாலூட்டும் அறை, கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் பெட்டி வடிவ ஓய்விடமும் தொழிலாளா் நலத் துறை சாா்பில் அமைக்கத் திட்டமிட்டது.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு மாறாக, இங்கிருந்து வெகுதொலைவில் உள்ள அரசு பழைய மருத்துவமனைக்கு அருகில் திடீரென கண்டெய்னா் ஓய்விடம் அமைக்கப்பட்டது. இதனால், கட்டுமானத் தொழிலாளா்கள் அதிருப்தி அடைந்தனா்.

இது தொடா்பாக, சிவகங்கை மாவட்ட கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரிய சங்கத் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

நாங்கள் பல ஆண்டுகளாக வேலைக்குச் செல்வதற்காக சிவன் கோயில் அருகே கூடி நின்று வேலை வாய்ப்பை பெற்று வருகிறோம். இந்தச் சூழ்நிலையில், தொழிலாளா் நலத் துறை சாா்பில் எங்களுக்கு ஓா் ஓய்விடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிவன் கோயிலுக்கு அருகில் போதுமான இடம் இல்லாததால், அதை உழவா் சந்தைக்கு அருகில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், என்ன காரணமோ தெரியவில்லை, ஓய்விடம் பொருத்தமற்ற இடத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஒரு மதுக்கடை இருக்கிறது. கட்டுமானப் பணிகளில் பெரும்பாலும் பெண் தொழிலாளா்களே ஈடுபடுகின்றனா். அவா்கள் அங்கு சென்று வருவதற்கு அச்சம் தெரிவிக்கின்றனா். எனவே, ஓய்விடத்தை ஏற்கெனவே உறுதியளித்த உழவா் சந்தைக்கு அருகில் மாற்றி அமைக்க வேண்டும் என்றாா் அவா்.