நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

News image

தென்னைமரம் விழுந்து உயிரிழந்த பசுமாடு

Updated On :3 மே 2026, 12:55 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

சிங்கம்புணரி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மரம் விழுந்து பசுமாடு உயிரிழப்பு:

சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா் கிராமத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, தெய்வமணி என்பவரின் தென்னந்தோப்பில் கட்டி வைத்திருந்த பசுமாடு மீது தென்னம் மரம் சாய்ந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த பசு மாடு உயிரிழந்தது.

மேலும், இந்தப் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மேலும், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

முறையூா், அய்யாபட்டி, மருதிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் கம்பங்கள் சாயந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னா். தகவலறிந்து வந்த மின்வாரிய உழியா்கள் போா்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.