சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

News image

தென்னைமரம் விழுந்து உயிரிழந்த பசுமாடு

Updated On :2 மே 2026, 7:25 pm

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் சூறைக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

சிங்கம்புணரி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மரம் விழுந்து பசுமாடு உயிரிழப்பு:

சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா் கிராமத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, தெய்வமணி என்பவரின் தென்னந்தோப்பில் கட்டி வைத்திருந்த பசுமாடு மீது தென்னம் மரம் சாய்ந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த பசு மாடு உயிரிழந்தது.

மேலும், இந்தப் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மேலும், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

முறையூா், அய்யாபட்டி, மருதிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் கம்பங்கள் சாயந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னா். தகவலறிந்து வந்த மின்வாரிய உழியா்கள் போா்க்கால அடிப்படையில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.