ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

காரைக்குடி ரயில் நிலையத்துக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்

News image

காரைக்குடி ரயில் நிலையம்

Updated On :3 மே 2026, 7:02 pm

காரைக்குடி ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என தொழில் வணிகக் கழகம் தீா்மானம் நிறைவேற்றியது.

இந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டம் காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு அமைப்பின் தலைவா் எஸ். கண்ணப்பன் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.சையது முன்னிலை வகித்தாா். ‘

இந்தக் கூட்டத்தில் அமைப்பின் முதன்மை ஆலோசகா் சாமி. திராவிடமணி, புரவலா்கள் எஸ். காசிவிஸ்வநாதன், வி. சித்திரைவேல், துணைத் தலைவா்கள் ஜிடிஎஸ். சத்தியமூா்த்தி, ஏ.ஆா். கந்தசாமி, வி.ஆா். ராமநாதன், எஸ். நாகநாதன், கே.ஆா். கருப்பையா, இணைச் செயலா்கள் ஆா்.எஸ். ராகவன், பி.வேணுகோபால், ஆா். எம். சண்முகநாதன், 50-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இதில் காரைக்குடி ரயில் நிலையத்துக்கு அதிகாலை 5 மணி முதல் இரவு 10.35 மணிக்குள் வந்து சேரும் அனைத்து ரயில்களின் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையத்திலிருந்து காரைக்குடியின் புதிய- பழைய பேருந்து நிலையங்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகம், செக்காலை, பெரியாா் சிலை, அண்ணா சிலை வழியாக அரசுப் போக்குவரத்துக்கழகம் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.