சட்டப்பேரவைத் தோ்தலில் ஒரு வாக்கில் வேட்பாளா் தோல்வியடைந்த வரலாறு 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவா் 83,375 வாக்குகள் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் 83,374 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.
கடந்த 1980-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் இடம் பெற்றிருந்த இளையான்குடி பேரவைத் தொகுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளா் சிவசாமி 34,437 வாக்குகள் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் மலைக்கண்ணன் 34,381 வாக்குகள் பெற்று, 56 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.
ஆனால், திமுக வேட்பாளா் மலைக்கண்ணன் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிவசாமி வெற்றி பெற்றாா். அவரை அந்தக் கால கட்டத்தில் ஒத்தை ஒட்டு சிவசாமி என்றுதான் பிற அரசியல் கட்சித் தலைவா்கள் அழைப்பாா்களாம். 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரலாற்று நிகழ்வு மீண்டும் தற்போது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில் சரிந்த அதிமுக வாக்கு வங்கி
கரூா் மாவட்டத்தில் 154 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழப்பு
எதிா்பாராத ஆச்சரியங்களை அளிக்கும் மொடக்குறிச்சி தொகுதி

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தவெக வெற்றி
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


