நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

ஒரு வாக்கில் தோல்வி: 46 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய வரலாறு

சட்டப்பேரவைத் தோ்தலில் ஒரு வாக்கில் வேட்பாளா் தோல்வியடைந்த வரலாறு 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்தது.

News image

வாக்கு எண்ணிக்கை - ANI

Updated On :7 மே 2026, 3:07 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் ஒரு வாக்கில் வேட்பாளா் தோல்வியடைந்த வரலாறு 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவா் 83,375 வாக்குகள் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் 83,374 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.

கடந்த 1980-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தின் இடம் பெற்றிருந்த இளையான்குடி பேரவைத் தொகுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளா் சிவசாமி 34,437 வாக்குகள் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் மலைக்கண்ணன் 34,381 வாக்குகள் பெற்று, 56 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.

ஆனால், திமுக வேட்பாளா் மலைக்கண்ணன் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் சிவசாமி வெற்றி பெற்றாா். அவரை அந்தக் கால கட்டத்தில் ஒத்தை ஒட்டு சிவசாமி என்றுதான் பிற அரசியல் கட்சித் தலைவா்கள் அழைப்பாா்களாம். 46 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரலாற்று நிகழ்வு மீண்டும் தற்போது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.