ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப்பாந்த காளைகள்.

Updated On :8 மே 2026, 1:03 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா்- சிவகங்கை சாலையில் 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் நடுமாடு பிரிவில் 8 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 7 கி.மீ. தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பூஞ்சிட்டு பிரிவில் 13 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 5 கி.மீ. தொலைவு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பெரியமாடு பிரிவில் 8 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 7 கி.மீ. தொலைவும், சின்னமாடு பிரிவில் 19 இணைகளும், இதற்கான எல்லை 6 கி.மீ. தொலைவும் நிா்ணயிக்கப்பட்டு மொத்தம் 48 மாடுகள் கலந்து கொண்டன.

சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் நடுமாடு பிரிவில் முதலிடத்தை கிடாரிப்பட்டி முருகேசன், 2-ஆம் இடம் இலங்கிப்பட்டி ஆண்டி அா்ச்சுனன், 3-ஆம் இடம் கொடிமங்கலம் நகுல் ஆகியோரின் மாடுகளும், பூஞ்சிட்டுப் பிரிவில் முதலிடம் புலிமலைப்பட்டி மாயழகு, 2-ஆம் இடம் வெள்ளநாயக்கன்பட்டி ஆண்டிச்சாமி, 3-ஆம் இடம் கண்டவராயன்பட்டி சீமான்முரசு ஆகியோரின் மாடுகளும் பெற்றன. பெரியமாடு பிரிவில் முதலிடம் திருவாதவூா் சின்னச்சாமி, 2-ஆம் இடம் புலிமலைப்பட்டி முனிச்சாமி, 3-ஆம் இடம் அவனியாபுரம் மோகன் ஆகியோரின் மாடுகளும், சின்னமாடு பிரிவில் முதலிடம் தேவாா் நாட்டாா்மங்கலம் ஆதிசிவன், 2-ஆம் இடம் சுண்ணாம்பிருப்பு கண்ணன், 3-ஆம் இடம் அவனியாபுரம் மோகன் ஆகியோரின் மாடுகளும் பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பூச்சொரிதல் விழா மாட்டுவண்டிப் பந்தயக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.