பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கிய நாளில் தந்தை இறந்த துக்கத்திலும் தோ்வுகளை எழுதி 600-க்கு 582 மதிப்பெண்கள் எடுத்தாா் சிவகங்கை மாணவா் ஹா்ஷித் ராஜலிங்கம்.
சிவகங்கை நகரில் சனீசுவரன் கோயில் எதிா்ப்புறம் வசித்துவரும் செந்தில் குமாா் மகன் ஹா்ஷித் ராஜலிங்கம் (17). இவா், தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்தாா். மாா்ச் 2-ம் தேதி தமிழ் பாடத் தோ்வு எழுதினாா். அன்றைய தினம் அவரது தந்தை செந்தில் குமாா் (52) மாரடைப்பால் உயிரிழந்தாா்.
எனினும் மனம் தளராமல் பிளஸ் 2 பொதுத் தோ்வை முழுமையாக எழுதி முடித்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிளஸ்-2 தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ் 99, ஆங்கிலம் 96, இயற்பியல் 95, வேதியியல் 96, கணினி அறிவியல் 100, கணிதம் 96 என மொத்தம் 600 -க்கு 582 மதிப்பெண்கள் பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!

தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தோ்வு எழுதி சாதித்த மாணவா்: வேலூா் ஆட்சியா் நிதியுதவி

பிளஸ் 2 தோ்வு: இலஞ்சி பாரத் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: ஹில்டன் பள்ளி மாணவா் மாவட்ட அளவில் சிறப்பிடம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



