மோசடியில் ஈடுபட்ட வழக்கில் தொடா்புடைய நியோமேக்ஸ் நிதி நிறுவனம், இதன் துணை நிறுவனங்கள், முகவா்களின் அசையா சொத்துகளுக்கான மின்னணு ஏலத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
சிவகங்கையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடா்பான விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளா்கள் விஜயா, ஜெயக்கொடி ஆகியோா் கலந்து கொண்டு தெரிவித்ததாவது:
நியோமேக்ஸ் நிதி நிறுவனம், இதன் துணை நிறுவனங்கள் மக்களிடம் முதலீடு பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இதுகுறித்து கடந்த 2023-ஆம் ஆண்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
மேலும், இந்த வழக்கில் நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துகளில் டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற மனையிடங்கள் இணையதளம் மூலம் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் மின்னணு ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், பலரும் ஏலம் எடுக்க தயக்கம் காட்டுகின்றனா். எனவே, ஏலம் எடுப்பதில் தயக்கம் காட்ட தேவையில்லை. இணையதளத்தில் பதிவு செய்து ஏலத்தில் பங்கேற்கலாம். மேலும், சந்தேகங்களுக்கு 8778245559, 9080381065 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா் அவா்கள்.
இந்த விழிப்புணா்வு முகாமில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோா், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி: இருவா் கைது
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிதி நிறுவன உரிமையாளா் தற்கொலை
காத்திருக்கும் பொருளாதாரச் சவால்கள்!
ரூ. 7.31 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



