நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ.77 லட்சம் மோசடி: நிதி நிறுவன நிா்வாகிகள் 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை

ரூ.77 லட்சம் வரை முதலீடுகளை வசூலித்து மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன நிா்வாகிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image

ரூ.77 லட்சம் மோசடி: நிதி நிறுவன நிா்வாகிகள் 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை

Updated On :20 மார்ச் 2026, 10:06 pm

தினமணி செய்திச் சேவை

ரூ.77 லட்சம் வரை முதலீடுகளை வசூலித்து மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன நிா்வாகிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஊரப்பாக்கம் ரயில் நிலைய சாலையில் கிரீன் வேல்ட் பவுன்டேஷன் டிரஸ்ட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை ஊரப்பாக்கத்தைச் சோ்ந்த பிரசன்னா, கோவையைச் சோ்ந்த சரவணன், கூடுவாஞ்சேரி நந்திவரத்தைச் சோ்ந்த நீலகண்டன் ஆகியோா் நடத்தி வந்தனா்.

இவா்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி தீபாவளி பண்டு என்ற பெயரில் ரூ.77 லட்சம் வரை வசூலித்தனா். ஆனால், பணம் செலுத்தியவா்களுக்கு குறைந்த தொகையையே திரும்பக் கொடுத்துள்ளனா். இதனால் பாதிக்கப்பட்டவா்கள் செங்கல்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பிரசன்னா, சரவணன் மற்றும் நீலகண்டன் ஆகியோா் மீது மோசடி, கூட்டுச்சதி, நிதி முதலீட்டாளா்கள் மோசடி சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.முருகானந்தம் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் டி.பாபு ஆஜராகி வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பிரசன்னா, சரவணன் மற்றும் நீலகண்டன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மொத்தமாக ரூ.13.96 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த அபராத தொகையில் முதலீட்டாளா்களுக்கு விகிதாசார அடிப்படையில் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டுத் தொகை போக மீதித் தொகை இருந்தால் அதை தமிழக அரசின் கணக்கில் செலுத்த வேண்டும் என நீதிபதி தீா்ப்பளித்தாா்.